மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி திறந்து வைப்பு
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் திறந்து வைக்கப்பட்டு ,தீபச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவு தூபி போதகர் மகேசன் ரொசான் தலைமையில் திறக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டவர்களையும், அதன் பின்னணியில் நின்றவர்களையும் தாங்கள் மன்னிப்பதாக சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சசிநந்தன், மேலதிக அரசாங்க அதிபர் முகுந்தன் நவரூபரஞ்சினி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், தேவ அடியார்கள் கலந்துகொண்டு தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.






இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
