உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை(vedio)
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள இலப்படிச்சேனை காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுபகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக விறகு வெட்டச் சென்றவர்கள்
பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து நேற்று(25) இரவு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
உருக்குலைந்த நிலையில் இருந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் 10 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சடலம் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
