கண்டியில் இருந்துக் கொண்டு கொழும்பு அரசியலில் மாற்றம் ஏற்படுத்திய பசில்
கடந்த வாரம் கொழும்பு அரசியல் சூடுபிடித்த போது, பொதுஜன பெரமுனவின் மூளையாகக் கருதப்படும் பசில் ராஜபக்ச, வெப்பத்திலிருந்து தப்பிக்க மலையக பக்கம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் மகனின் திருமணம் கடந்த வாரம் இடம்பெற்றதுடன், மணமகன் தரப்பிலிருந்து கையொப்பமிடுவதற்கு பசில் பொறுப்பேற்றார்.
அதற்கமைய, பசில் கடந்த சனிக்கிழமை தனது மனைவி புஷ்பதாவுடன் கண்டிக்கு சென்று அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்து திருமண வைபவத்தில் கலந்து கொண்டார்.
பசில் தனது ஓய்வைக் கழிப்பதற்காக ஹந்தான பகுதியில் ஒரு அழகான பங்களாவைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதற்கமைய, பசில் அந்த நாட்களை தனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு நண்பர்களையும் அழைத்து சென்றுள்ளார்.
எப்படியிருப்பினும், ஹந்தானையில் தங்கியிருந்த சில நாட்களில் அரசியலில் ஈடுபடாமல் இருந்த போதிலும், பசில் பாரிய அரசியல் திட்டத்தை தயாரித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பசில் ஹந்தானையில் இருந்தே கொழும்பில் உள்ள பல பலமான அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் சார்ள்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பசில் செயற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியாகியுள்ளது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri