பசிலின் வருகை சட்ட விரோதமானது அல்ல! - நியாயப்படுத்தும் ரணில்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல. ஆகவே அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது. ஆனால் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படும். என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானது என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
இவரது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டவிரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் குறிப்பிடவில்லை.
ஆகவே நிதியமைச்சரின் பாராளுமன்ற உறுப்புரிமையினை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது. தேசிய பொருளாதாரம், ஜனநாயக கொள்கை ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன.
இவ்வாறான நிலையில் நாட்டின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. குடும்ப ஆட்சி தொடர்ந்தால் நாட்டு மக்கள் எவருக்கும் எதிர்காலமென்றதொன்று கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.