நாடு திரும்பினார் பசில்!
அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடுப்பகுதியில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தனிப்பட்ட விஜயமாக பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்த காலப்பகுதியில் பதில் நிதி அமைச்சராக G.L.பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ச கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.