அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் பசில்! செய்திகளின் தொகுப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல விசேட உள்ளக கலந்துரையாடல்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தலைமையில் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,