தென்னிலங்கை அரசியல் சதுரங்க விளையாட்டில் மீண்டும் பசில்
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைய ஏழு பிரிவுகளாக செயற்படும் கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிளவுகளுக்கான உண்மை நிலவரங்களை அடையாளம் கண்டு, அதனை சரியும் நடவடிக்கையை பசில் முன்னெடுத்து வருகிறார்.
பொதுஜன பெரமுன
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் பண்டார மற்றும் ஜயந்த கட்டகொட ஆகியோருக்கு, ஒன்றிணையக்கூடிய நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான டலஸ் அழகப்பெரும குழு, விமல் வீரவன்ச உள்ளிட்டோர், மைத்திரிபால சிறிசேன, பிரசன்ன ரணதுங்க, நிமல் லான்சா, நாமல் ராஜபக்ச, நாலக கொடஹேவா போன்றோர் 7 பிரிவுகளாக உடைந்துள்ளனர்.
இது பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதனை சரி செய்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
