வடகொரியாவில் ஆயுதம் வாங்கிய இரகசியத்தை பசில் வெளியிட்டது ஏன்?

Colombo Basil Rajapaksa North Korea
By Kamel Feb 12, 2022 01:16 AM GMT
Report
Courtesy: அ. மயூரன், M.A.

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்திருந்தார்.

முதலாவதாக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில் அங்கு இலங்கை சாதாரண வர்த்தகத்தில் ஈடுபடுவதையே அமெரிக்கா விரும்பவில்லை.

அப்படி இருக்கையில் ஆயுதக் கொள்வனவை அதுவும் கருப்பு சந்தையில் வடகொரியா மூலம் இருந்து இலங்கை அரசு பெற்றதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பதை இலங்கை அரசுக்கு தெரியும்.

அப்படி தெரிந்திருந்தும் ஏன் பொறுப்பு வாய்ந்த நிதி அமைச்சர் இவ்வாறு தகவலை பகிரங்கமாக கூறினார் என்ற கேள்விக்கான பதில் மிகவும் முக்கியமானது. இத்தகவலை இவர் வெளியிட்டதன் மூலம் இரண்டாவதாக இன்னொரு பாரிய பிரச்சினை இங்கு காத்திருக்கின்றது.

அதாவது வட கொரியாவில் இருந்து இரசாயன ஆயுதங்கள் மற்றும் கொத்துக்குண்டுகள் போன்ற சர்வதேசரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை அரசு பெற்றுள்ளது என்ற பலமான குற்றச்சாட்டு இங்கு இலகுவாக வைக்கப்பட கூடியது.

எனவே இப்படி அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி வட கொரியாவில் இருந்து கள்ளச் சந்தையில் இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கியது என்ற குற்றச்சாட்டும், அதுவும் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கி தமிழ் மக்களை படுகொலை செய்யப் பயன்படுத்தி உள்ளது என்ற ஆழமான குற்றச்சாட்டும் இங்கு எழக்கூடிய நிலையில் ஏன் இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு உண்மையை அவிழ்த்துவிட்டார் என்ற கேள்வி பலமாக எழுகிறது.

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தி தமிழ் மக்களைப் படுகொலை செய்தது என்கின்ற ஆழமான குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

வடகொரியா சட்டவிரோதமான முறையில் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை விற்பனை செய்திருப்பதனால் அவை இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளாக இருக்க முடியும் என்கின்ற கருத்து வலுவாக எழமுடிகிறது. இது கொத்துக் குண்டு வீசப்பட்டதற்கான ஒரு ஆதாரமாக முன்வைக்கப்பட கூடியதாய் இருக்கின்றது.

எந்த நாட்டிலிருந்து அல்லது நாடுகளிடமிருந்து இலங்கை அரசு இவ்வாறு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் பசில் ராஜபக்ஷவின் தகவலின்படி அத்தகைய ஆயுதங்களை சட்டவிரோத கள்ளச் சந்தை வியாபாரத்தில் ஈடுபடும் வடகொரியாவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான தகவலை பசில் ராஜபக்ச வெளிப்படையாக முன்வைத்ததற்குப் பின்னணியாக ஒரு பலமான காரணமும் தேவையும் ஆளும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு உண்டு என்பது இங்கு பெரிதும் கவனத்துக்குரியது என்பதே உண்மை.

இலங்கை அரசு தற்போது பொருளாதார ரீதியில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இது இலங்கையை ஆளும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை பெரிதும் பாதிக்கப்படவல்லதாய் காணப்படுகிறது.

அரசியல் பொருளாதார நெருக்கடி என்பது பிரதானமாக வெளிநாட்டு கடன் சுமையிலிருந்து தோன்றியது. இத்தகைய கடன்சுமை பெரிதும் யுத்தகாலத்தில் ஏற்பட்ட கடன் பளுவில் இருந்து உருவெடுத்துள்ளது.

சிங்கள மக்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பெரிதும் வரவேற்கிறார்கள். புலிகளைத் தோற்கடித்து தம்மை ராஜபக்ச குடும்பம் காப்பாற்றியதாக சிங்கள மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

புலிகளை அழிக்கவல்ல கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் ஏனைய நாடுகளும் கொடுக்க முன்வராத நிலையில் வடகொரியா போன்ற சட்ட விரோத சந்தையைக் கொண்டுள்ள கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து இலங்கை அரசாங்கம் வாங்க நேர்ந்தது என்றும் அதனால் அதிக கடன் சுமை ஏற்பட்டது என்றும் சிங்கள மக்கள் கருதி ராஜபக்ஷாக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சகிப்புத் தன்மையுடன் நோக்கி ராஜபக்ஷ அரசாங்கத்தை காப்பாற்ற முற்படுவர்.

புலிகளை தோற்கடிப்பதற்காகத்தான் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு கள்ளச்சந்தையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தது என்பதை சிங்கள மக்களும், பௌத்த மகா சங்கமும், இராணுவமும், சிங்கள ஊடகங்களும், சிங்கள மக்களும் கருத்திற்கொண்டு ராஜபக்ச குடும்பத்தின் மீது அதிக பரிவுடன் காணப்படுவர்.

இதுதொடர்பான போர்க் குற்றச்சாட்டுக்களிலில் இருந்தும் ராஜபக்ஸாக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் எழுச்சி சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாகவே ஏற்பட்டுவிடும்.

எனவே மக்கள் ஆதரவு சரிந்துகொண்டு போகும் ராஜாபக்ஷ குடும்பத்தை தூக்கி நிறுத்தி அரியாசனத்தில் நிமிர வைக்க இத்தகைய தகவல் வெளியீடு அவசியமாக இருக்கிறது.

அரியாசனத்தில் பலமாக இழுத்துக்கொண்டால் பின்பு வெளிநாடுகள் கொடுக்கக்கூடிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பது சாத்தியமாகிவிடும். எதற்கும் முதல் தமது அரியாசனத்தை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த கடுமையான உண்மையை அவிழ்த்து விட்டுள்ளார்.

இனி மகாசங்கம் இதனைப் பெரிதாக தூக்கிப்பிடித்து ராஜபக்சகளைப் பாதுகாக்க மக்களை ஒன்று திரட்டி இனப்படுகொலை, இனஅழிப்பு வாதத்தால் ராஜபக்சக்களை வலுவாக தூக்கி நிறுத்த இத்தகைய தகவல் பெரும் வாய்ப்பை வழங்கும்.

எப்படியோ இனப்படுகொலைவாத, தமிழின அழிப்புச் சகதிக்குள் சிக்குண்டு இருக்கும் சிங்கள பௌத்த இனம் இங்கு நீதி நியாயங்களை பற்றி ஒருபோதும் பேசப்போவதில்லை. தமிழ் மக்களை அழிப்பதற்கான ஒவ்வொரு செயலையும் அவர்கள் புனிதமானதாகவும் மேன்மையானதாகவுமே சிங்கள மக்கள் கருதுவர்.

அத்தகைய கருத்து நிலையானது குடும்பத்தின் அநீதிகளை மறைக்கவும் தமிழினத்தை மேலும் கொடுக்கவும் அது வழிவகுக்குமே தவிர ராஜபக்ஷ குடும்பத்துக்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்தான் இத்தகைய இரகசியத்தை எத்தகைய தயக்கமும் இன்றி வெளியிட்டுள்ளார்.

எனவே தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளை பெருமையுள்ள ஆதரிக்கும் சிங்கள அரசியல் கலாச்சாரப் பின்னணியில் தமிழ் மக்களுக்கு இனிமேல் ஏதாவது அற்ப சொற்ப உரிமைகளாகளாவது வழங்கப்படும் என்று யாராவது கற்பனை செய்தால் அது மிகப் பெரும் தவறாகும்.

சிங்கள மக்களின் மன விருப்பத்தை தெளிவாகப் புரிந்து கொண்டதன் பின்னணியில் இத்தகைய மோசமான குற்றச்செயலை எத்தகைய தயக்கமின்றி ஒரு முக்கிய அமைச்சர் சொல்லியிருக்கின்றார் என்பது ஆழ்ந்த கவனத்திற்குரியது.

அபாயகரமான தகவல்கள் , செய்திகள் தமிழ் மக்களை நோக்கி வெளிவந்துள்ளன என்பது கவனத்துக்குரியது.

ஒரு முக்கிய அமைச்சரால் இத்தகைய துணிச்சலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்ற செய்தியில் இருந்து எதிர்காலத்திற்கான சிங்கள அரசின் அரசியல் முன்னெடுப்புக்களை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதாவது தமிழ்மக்களுக்கான விடிவும் போராட்டம் மிகவும் கடினமான பாதையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் அதிகமதிகம் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டிய காலம் இது என்பதை பெரிதும் கவனத்திற்கு எடுத்து செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர் அ. மயூரன், M.A.

You May Like This Video




1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US