அநுரவின் ஆட்சி தொடர்வது கேள்விக்குறியே! விளக்கமளித்த வேட்பாளர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையுமில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“2019ஆம் ஆண்டு பெரும்பான்மையை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து இரண்டு வருடங்களில் பதவியிலிருந்து விலகினார்.
இம்முறை வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்க, வெறும் 42 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றார். அவருடைய கட்சி, நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பது நிச்சயமான ஒரு விடயமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 11 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri