பிரதமர் மகிந்தவிற்கு மாம்பழங்களை பரிசளித்த பங்களாதேஷ் பிரதமர்!
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு பங்களாதேஷ் மாம்பழங்களை தனது நல்லெண்ண பரிசாக அனுப்பியுள்ளார்.
Dhaka Tribune வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் பிரதமரிடம் மாம்பழங்களை கையளித்துள்ளார்.
இந்த பரிசுக்கு பங்களாதேஷ் பிரதமருக்கு, இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிக்கிறது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார். அத்துடன், இந்திய ஜனாதிபதி மற்றும் பல முதலமைச்சர்களுக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
