பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
தனது வாழ்க்கையில் முதல் முறையாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பான விசாரணைக்கு இன்று(28.11.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
அமைச்சரவை தீர்மானம்
அந்த வகையில், கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி கடந்த சில நாட்களாக, கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல அமைச்சரவை அமைச்சர்கள், வாக்குமூலங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam