பண்டாரவளை - கபரகல தோட்டத்தில் மண்சரிவு (video)
பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள கபரகலை தோட்ட வைத்தியசாலை பகுதியில் பெய்த அடைமழை காரணமாக மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த அனர்த்தத்தில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ள போதும் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஆய்வு
காயமடைந்த 7 பேரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் இராணுவத்தினர் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இன்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
