உள்ளுராட்சி மன்ற வெளிவாரிப் பணியாளர் நியமன விவகாரம் : அமைச்சர் நேரிலும் ஆராய்வு

Jaffna Northern Province of Sri Lanka Ramalingam Chandrasekar
By Theepan May 01, 2026 09:08 AM GMT
Report

வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள வெளிவாரிப் பணியாளர்களின் நியமனங்களில் காணப்படும் இழுபறிகள் தொடர்பில் சிறந்ததொரு தீர்வை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸிடம் உறுதியளித்துள்ளார்.

தற்போது அரச சேவையில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை முடிவு எடுத்துள்ள நிலையில், வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றுவோரின் நியமனப் பிரச்சினைகள் தொடர்பில் சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சரிடம் தவிசாளர் அனுமதி கோரியிருந்தார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்

நியமனங்களுக்காக காத்திருந்தவர்கள்

இந்நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு அமைச்சர் இ.சந்திரசேகரன் நேரில் சென்று தொழிலாளர்களின் நியமனப் பிரச்சினை மற்றும் நடைமுறையில் உள்ள தடைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

உள்ளுராட்சி மன்ற வெளிவாரிப் பணியாளர் நியமன விவகாரம் : அமைச்சர் நேரிலும் ஆராய்வு | Ban On Appointment External Staff Local Government

இச்சந்திப்பில் தவிசாளர், அரசாங்கங்கள் 180 நாட்களை நிறைவு செய்தவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காக அவ்வப்போது சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்ட போதும் எமது வடக்கு மாகாண தொழிலாளர்கள் பயனடைய முடியவில்லை.

முகாமைத்துவச் சேவைகள் திணைக்களத்தின் சுற்றறிக்கை (2/2020) பிரகாரம் ராஜபக்சக்கள் காலத்தில் பல்தேசிய செயலணியின் ஊடாக இராணுவ மயமாக்கப்பட்ட நியமனங்களை புகுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அது ஏற்கனவே வெளிவாரி பணியாளர்களாக நியமனங்களுக்காக காத்திருந்தவர்களை நடுவீதியில் விடுவதாக அமைந்தது. அதனை நாம் எதிர்த்தோம்.

ஏலவே முகாமைத்தவ சேவைகள் திணைக்களத்தின் (03/2018) கூற்றுநிருபத்தின் பிரகாரம் அரச நியமனங்களை வழங்குவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட ஆளணியின் பிரகாரம் வெற்றிடங்களை நிரப்ப நாம் கோரிக்கை முன்வைத்தும் இதுவரையில் சாதகமான பதில்கள் கிட்டவில்லை.

தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ள 180 நாள் நியமனத்திலும் எமது உள்ளுராட்சித் தொழிலாளர்கள் உள்வாங்கப்படுவதற்கு தடைகள் உள்ளன.

நியமனக் கோரிக்கை

மாகாண சபையின் சுற்றறிக்கை ஒன்றின் பிரகாரம் எமது உள்ளுராட்சி சபைகள் அமைய தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள காணப்படும் தடைகளால் 2018 ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்கள் வெளியிட்ட 180 நாட்கள் பணியாற்றியோருக்கு நியமனம் வழங்கும் அமைச்சரவை அனுமதிகளின் பலன்களையும் நாம் 4 தடவைகள் வரை ஏற்கனவே இழந்து விட்டோம்.

இப்போதும் நாம் இழக்கின்றோம். நாட்டின் பிற மாகாணங்களைக் காட்டிலும் உள்ளுராட்சி மன்றங்கள் பல ஆண்டுகளாக நியமனம் அற்றுள்ளன.

உள்ளுராட்சி மன்ற வெளிவாரிப் பணியாளர் நியமன விவகாரம் : அமைச்சர் நேரிலும் ஆராய்வு | Ban On Appointment External Staff Local Government

இதனால் சபை நிதி இழப்பு மற்றும் சேவை வழங்களில் பாதிப்பு ஏற்படுகின்றது. தொழிலாளர்களின் தனிப்பட்ட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொருத்தமான முறையில் வடக்கில் உள்ள ஒரேயொரு அமைச்சர் என்ற வகையில் தாங்கள் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும். அமைச்சரவை முடிவுகளில் தாங்கள் இவ்விடயத்தில் தாக்கம் செலுத்த வேண்டும் என தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கேட்டுக்கொண்டார்.

சந்திப்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் இராமலிங்கம் பகிரதனும் சபை சார்ந்து மத்திய அரசினால் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்குக்;கு கொண்டு வந்தார்.

பாதிக்கப்படும் தொழிலாளர்களும் தமது நியமனக் கோரிக்கையினை முன்வைத்தனர். இந்நிலையில் தொழிலாளர்களின் ஆவணங்கள், சேவைக்கால ஆவணங்கள், சபையில் காணப்படும் வெளிவாரி தொழிலாளர் தொடர்பான நிர்வாக முறையான ஆவணங்களையும் அறிக்கைகளையும் பெற்று பார்வையிட்டு விபரங்களை ஆராய்ந்த அமைச்சர் தொலைபேசியில் பொதுநிர்வாக உள்நாட்டளுவல்கள் அமைச்சருடன் பேசியதுடன் அரசாங்கம் இவ்விடயத்தில் உத்தியோகபூர்வ அறிக்கைளைப் விரைவாகப் பெற்று பொருத்தமான தீர்வொன்றை விரைவில் முன்வைப்பதாக உறுதியளித்தார்.

யாழ் மாவட்டத்தில் 400இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெளிவாரியாக உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!

காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!

உள்ளுராட்சி மன்ற வெளிவாரிப் பணியாளர் நியமன விவகாரம் : அமைச்சர் நேரிலும் ஆராய்வு | Ban On Appointment External Staff Local Government

உள்ளுராட்சி மன்ற வெளிவாரிப் பணியாளர் நியமன விவகாரம் : அமைச்சர் நேரிலும் ஆராய்வு | Ban On Appointment External Staff Local Government

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US