இலங்கை விதித்த தடை - போராட தயாராகும் பிரித்தானிய தமிழ் அமைப்புகள்
நூற்றுக்கணக்கான தமிழர்கள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிராக போராட பிரித்தானிய தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
அதன்படி இலங்கை அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை காரணமாக நீதி மற்றும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தொடர பிரித்தானிய தமிழ் இளைஞர்கள் அமைப்பு உறுதி அளித்துள்ளன.
தமிழ்களின் நியாயமான அபிலாஷைகளை தொடர்ந்தும் வலியுறுத்த விழிப்புணர்வை மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானிய தமிழ் இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் தமிழ் இளைஞர் அமைப்பு இலங்கை அரசால் தொடர்ந்து தடை செய்யப்படுவதை தாம் ஆச்சரியமான ஒன்றாக கருதவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,