450 கிராம் பாணின் நிறையைக் குறைக்குமாறு யோசனை
பாணின் விலையை குறைக்கவேண்டுமா? நிறையைக் குறைக்குமாறு யோசனை பாணின் நிறையை குறைத்தால், விலையையும் குறைக்கமுடியும் என்று அரசாங்கத்திடம் வெதுப்பக உாிமையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பாணின் நிறையை 5 கிராமினால் குறைத்தால், அதன் விலையையும் 5ரூபாவினால் குறைக்கமுடியும் என்று அகில இலங்கை வெதுப்பக உாிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
450 கிராமே தற்போது இலங்கையில் பாணுக்கான அனுமதிக்கப்பட்ட நிறையாக உள்ளது.
பாரிய உற்பத்திகளை மேற்கொள்ளும் வெதுப்பகங்கள் அனுமதிக்கப்பட்ட நிறையில் பாணை உற்பத்தி செய்து வருகின்றன.
எனினும் கிராமப் புறங்களில் பாணின் நிறை குறைந்தளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
கோதுமாவின் விலையை இறக்குமதி நிறுவனங்கள் 17 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளமையை அடுத்து பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam