முல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு பிணை
புதிய இணைப்பு
முல்லைத்தீவில் அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைதான மாணவனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மோதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மாணவனை புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று மாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்தி - ஷான்
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு அரச பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதிக்கொண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் அவர்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
பலத்த காயம்
குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் தாக்குதலை மேற்கொண்ட மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan