கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் பெல்ட் திடீரென பழுதடைந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விமான நிலைய ஊழியர்கள் குழுவொன்று தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய முனையமொன்று அடுத்த 09 மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய முனையம்
விமான நிலையத்தின் இரண்டாவது முனையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam