கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் பெல்ட் திடீரென பழுதடைந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விமான நிலைய ஊழியர்கள் குழுவொன்று தமது கடமைகளை சரிவர செய்யாத காரணத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய முனையமொன்று அடுத்த 09 மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய முனையம்
விமான நிலையத்தின் இரண்டாவது முனையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
