கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
பண்டாரவளை - பதுளை வீதியில் திக்கராவ வளைவில் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வழுக்கிச் சென்று பேருந்தின் பின் சக்கரத்தில் சாரதியின் தலை சிக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் விபரம்
இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் சிறியளவில் மழை பெய்ததாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |