மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை
மன்னார் (Mannar) மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது.
வீசி வரும் கடும் காற்று காரணமாக இன்று (23.05.2024) தாழ்வுபாடு, செளத்பார், பேசாலை, பள்ளிமுனை ஆகிய கிராம கடற்றொழிலாளர்களே தமது கடற்றொழில் நடவடிக்கையை தவிர்த்துள்ளனர்.
காற்றின் வேகம்
அதீத காற்றினால் கடல் அலையும் மேவோங்கி காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் தங்கள் கடற்றொழில் வள்ளங்கள், வலைகள் உட்பட்ட உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளனர்.
இதே நேரம் காற்றின் வேகம் காரணமாக கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர் வாடிகளும் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |