யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் அதிகரிக்கும் திருட்டு: செய்திகளின் தொகுப்பு
வலி.வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கை படையினர் கைப்பற்றி வைத்திருந்த காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக வீட்டு உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிவில் உடையில் தம்மை இராணுவம் என்று அடையாளப்படுத்துவோரே இவ்வாறான திருட்டு வேலைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் காணப்படும் பெறுமதி வாய்ந்த உபகரணங்களை இரவு நேரங்களில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி பிரவேசிப்பவர்கள் திருடிச் செல்வதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி விடுவிக்கப்பட்ட 108 ஏக்கர் காணியில் சில வீடுகள் கட்டடங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வீடுகளில் தற்போது சில பெறுமதியான பொருட்கள் இருப்பதாகவும் அதனையே இரவு வேளைகளில் திருடிச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 மணி நேரம் முன்

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
