இராணுவ சாரதியின் மோசமான செயல் -அடுத்தடுத்து மோதித்தள்ளிய 5 வாகனங்கள்
கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 5 வாகனங்களை மோதி விபத்தை ஏற்படுத்திய இராணுவ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டிய சாரதியினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த இராணுவ சாரதி நேற்று இரவு 8.30 மணியளவில் கட்டுகஸ்தோட்டை வீதியின் நித்தவெல பிங்கயவுக்கு அருகில் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இராணுவ உத்தியோகபூர்வ வாகனம் 5 வாகனங்களை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்னர் குறித்த இராணுவ வாகனத்தின் சாரதி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.