உலகத்திற்கு வரவிருக்கும் பேரழிவு: அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு:செய்திகளின் தொகுப்பு
2023ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போதும் அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு.
ஏனெனில், பாபா வாங்காவின் கணிப்புகளின்படி பல சம்பவங்களும் நடைபெறுவதால் அவரது கணிப்புக்கு பலரிடத்திலும் வரவேற்பு இருந்தே வருகிறது.
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானா இறப்பு, பராக் ஒபாமா அதிபரானமை, பிரெக்சிட் வழக்கு இப்படியாக பல சம்பவங்கள் பாபா வாங்காவின் கணிப்பின் படியே நடந்திருக்கின்றன.
இது போலவே 2023ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன.உலகில் உள்ள அணு உலைகள் உருகுவதால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படுமாம்.
ஒருவேளை பாபா வாங்காவின் கணிப்பு படி பூமியில் சிறிய மாற்றம் நடந்தால்கூட அது கால நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனக் கூறப்படுகிறது.
இதுபோக, சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் வீசக்கூடுமாம். அதேபோல சூரியனை விட்டு பூமி விலகினால் பனி யுகத்திலும் அடர்ந்த இருளிலும் மூழ்கக் கூடிய கதி நேரலாம்.
இதனையடுத்து, மக்கள் மீது உயிரியல் ரீதியான போரை உலகின் மிகப்பெரிய நாடு மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வாங்க கணிப்பு எச்சரிக்கிறது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
