கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக கல்முனை மாநகர ஆணையாளர் அஸ்மி நியமனம்
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் SLAS - I அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி நிர்வாக சேவையில் இரு தசாப்தத்தை பூர்த்தி செய்துள்ளார்.
பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளருமாகவும் கடமையாற்றியதோடு இறுதியாக கல்முனை மாநகராட்சி ஆணையாளராக கடமையாற்றினார்.
உள்ளூராட்சி சேவை அனுபவம்
ஏ.எல்.எம். அஸ்மி ஒரு சிறந்த நிர்வாகி, இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர், அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக செய்துவரும் ஒருவராவார்.

அஸ்மியின் சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி சேவை அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் மாகாண அதிகார பரவலாக்கத்தில் இன்னும் ஒரு சிங்கமான கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராக பதவி வகித்து கூட்டுறவுத்துறையை பிரகாசிக்கச் செய்தவர் என்ற வகையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டும் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்மொழி புலமைமிக்கவரான அஸ்மி, 11 வருடங்கள் உள்ளூராட்சி மன்ற அனுபவத்தில் திளைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மாநகர சபையை மிளிரச்செய்வதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதோடு கல்முனை மாநகர சபையையும் மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri