அயோத்தி தலைமை அர்ச்சகர் தலைமையிலான குழு இலங்கை வருகை
இந்தியாவின் அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைலாஷானந்த் கிரி ஜி மஹாராஜ் தலைமையிலான 14 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர் நேற்று காலை (23.02.2026) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (UL-192) விமானம் மூலம் வருகை தந்த இக்குழுவினரை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
விஜித ஹேரத் உடன் விசேட கலந்துரையாடல்
இக்குழுவினர் இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதில் மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், நுவரெலியா சீதை அம்மன் கோவில், பண்டைய சிவ ஆலயங்கள், ஆகியவற்றுக்கு இவர்கள் செல்லவுள்ளனர்.
தமது விஜயத்தின் போது, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் குழுவினர் ஈடுபடவுள்ளனர்.