சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை : சாவகச்சேரியில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி
சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி நேற்றையதினம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது.
வேர்ல்ட் விஷன் லங்கா நிறுவனம் சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் சாவகச்சேரி பிரதேச சிறுவர்கள் பாடசாலை மணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து இந்த நடைபவனியை முன்னெடுத்திருந்தனர்.
மாணவர்களின் விண்ணப்பம்..
நடைபவனியானது சாவகச்சேரி நகரசபைக்கு முன்பாக ஆரம்பித்து சாவகச்சேரி பேருந்து நிலையம்வரை சென்றடைந்து அங்கு வீரசிங்கம் பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வுக்கான வீதி நாடகம் நடத்தப்பட்டு பின்னர் நடைபவனி சாவகச்சேரி கலாசார மண்டபத்திற்கு சென்றடைந்தது.
இந்தநிகழ்விற்கு தென்மராட்சி வலையக்கல்விப்பணிப்பாளர் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தநிகழ்வில் விழிப்புணர்வு சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதோடு பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி மாணவர்களினால் கையொப்பமிட்ட விண்ணப்பக்கோரிக்கையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.











இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
