யாழில் வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
வீதி விபத்து மற்றும் மாணவர்களின் கொண்ணிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று(12) மதியம் 12:00 மணியளவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் இராச்சியலச்சுமி சுப்பிரமணிய குருக்கள் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஆதித்தன் கலந்துகொண்டு வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பாகவும், வீதியில் பயணிக்கும் போது அவதானமாக பயணித்தல், வீதி விபத்து ஏற்பட்டால் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்குரிய வழிமுறைகள் உட்பட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri
