கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று (23.11.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தெளிவூட்டல்
இதில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் கலந்து கொண்டு போதைப்பொருள் கட்டுப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்களுக்கு தெளிவூட்டல் வழங்கியிருந்தார்.
அத்துடன் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கல் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் பேருந்து நிலையத்தில் பொலிஸாரால் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



