அழிந்துவரும் பறவை இனத்துக்காக வேலணையில் நாட்டப்பட்ட விழிப்புணர்வு பலகை!
இயற்கைக்கான கூட்டிணைவில் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் நோக்குடன் அழிவின் விளிம்பில் இருக்கும் Indian Courser பறவை இனத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமான விழிப்புணர்வு பலகை ஒன்று மண்கும்பான் பிள்ளையாளர் கோவிலுக்கு முன்புறமாக நாட்டப்பட்டது.
Indian Courser பறவை இனம் மிகவும் அரிதான, அழிந்துவிடும் ஆபத்தின் விளிம்பில் காணப்படும் பறவையாகும். இதேநேரம் இலங்கையில் வடபகுதியான நெடுந்தீவில் மட்டுமே காணப்படுகின்ற Indian Courser எனும் பறவை காணப்படுகின்றது.
இந்தநிலையில் அழிவின் விளிம்பில் இருக்கும் குறித்த பறவையை பாதுகாப்பதற்காக சி.சி.எச் நிறுவனம், இயற்கை ஊக்குவிப்பு கழகம் மற்றும் டயலொக் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
விழிப்புணர்வு பலகை
அத்துடன் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு நெடுந்தீவு பிரதேச செயலகம், வட மாகாண சுற்றுலா பணியகம், நெடுந்தீவு பிரதேச சபை , வேலணை பிரதேச சபை , நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் ஆகியனவும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இந்நிலையிலேயே நேற்று (09.09.25) குறித்த பறவை இனத்தின் இருப்பை உறுதிசெய்யும் செயற்றிட்டத்தின் விழிப்புணர்வு பலகை வேலணை பிரதேசத்தின் மண்கும்பான் பகுதியில் கால் நடை மேச்சல் தரைக்காக அடையாளப்படுத்தப்பட்ட அரச நிலத்தில் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலர் , வேலணை பிரதேச சபையின் தவிசாளர் ,வேலணை பிரதேச சபை உறுப்பினர் , வேலணை பிரதேச சபையின் அதிகாரிகள், டயலொக் நிறுவன உத்தியோகத்தர்கள், இயற்கை ஊக்குவிப்பு கழக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




