பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய ஆளும் கட்சி உறுப்பினரின் செயலாளர் - பின்னணி தொடர்பில் தீவிர விசாரணை
அவுஸ்திரேலியாவுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்பு செயலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அண்மையில் மனுவர தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடி தொடர்பில் பொது மக்களிடமிருந்து பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இந்த மோசடியில் ஈடுபட்ட ஏனையவர்களைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri