இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான பயண ஆலோசனையை மீளாய்வு செய்ய அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் அவதானமாக இருக்குமாறு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு
அத்துடன், உணவுப் பொருட்களுக்கும் மருந்து தட்டுப்பாடும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களிடம், அதிக கட்டணம் வசூலிப்பது, கடன் அட்டை மோசடி, கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச் செயல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
