அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை (Video)
தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர் லிடியா தோர்பேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பின் போது தமிழ் அகதிகளின் கதைகளையும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையின் சாட்சிகளையும் லிடியா தோர்பேவுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (21.03.23) லிடியா தோர்ப், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 33 வயதான ஈழத் தமிழரின் இனப்படுகொலை தொடர்பான உரையை வாசித்துள்ளார்.
தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை நேரில் கண்ட அவரது கதையை அந்த உரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இவ்வுரையின் போது, லிடியா தோர்ப், இனப்படுகொலையை அங்கீகரிப்பது அவசியம் என்றும், அகதிகளுக்கு எதிரான அவர்களின் சித்திரவதை வடிவங்களையும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களில் அவர்கள் மெத்தனமாக இருப்பதையும் ஒப்புக்கொள்ளுமாறு குடிவரவுத் துறைக்கு இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam