அவுஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை! வெளியான அதிர்ச்சி தகவல்
அவுஸ்திரேலியாவில்(Australia) வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி ஆரம்பித்து 2027 மார்ச் 31ஆம் திகதி வரை வெளிநாட்டவர் வாங்க முடியாது என்று அவுஸ்திரேலிய நிதியமைச்சர் ஜிம் சாம்மர்ஸ் (Jim Chalmers) அறிவித்துள்ளார்.
இந்த இரண்டு ஆண்டு தடை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது பின்னர் மறுஆய்வு செய்யப்படும் என்று சாம்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
வீடு வாங்க தடை
அவுஸ்திரேலியாவில் வீட்டுடைமை என்பது ஒரு பெரிய பிரச்சினையாகக் கடந்த ஆண்டு(2024) உருவெடுத்துள்ளது.
எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் அது ஒரு முக்கிய விவகாரமாகத் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே போதுமான வீடுகள் இல்லை என்ற நெருக்கடியைச் சமாளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தடையின் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 1,800 வீடுகள் உள்நாட்டு மக்களுக்காக ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
