சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுவர்களின் வயதுக்கு வரம்பு விதிக்கவுள்ள அவுஸ்திரேலியா
மன மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை மேற்கோள் காட்டி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்காக, சிறுவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க அவுஸ்திரேலியா உத்தேசித்துள்ளது.
இந்த திட்டம் டிஜிட்டல் உரிமை சட்டத்தரணிகளின் எச்சரிக்கையை அடுத்து அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
இந்த தகவலை அவுஸ்திரேலியா பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், இந்த வயது வரம்பு 14 முதல் 16 வரை இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர்களை, சமூக ஊடக சாதனங்களில் இருந்து விலக்கி, அவர்களை நடைப்பயிற்சி, நீச்சல் குளங்கள் மற்றும் டென்னிஸ் மைதானங்களின்; பார்க்க விரும்புவதாக அல்பனீஸ் அவுஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சமூக ஊடகங்களில் வயதுக் கட்டுப்பாட்டை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டபோதும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri