அமைச்சுகள் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணை
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியை நாடவுள்ளதாக ஆடிட்டர் ஜெனரல் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்தே தெரிவித்துள்ளார்.
விசாரணை
ஆவணப்படுத்தப்பட்டவாறு சம்பந்தப்பட்ட வாகனங்கள் அரச நிறுவனங்களின் வசம் உள்ளதா, வாகனங்கள் திறமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அமைச்சகங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களை தனித்தனியாக விசாரிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.