மட்டக்களப்பில் பெண்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு
சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவினை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பெண்களின் உரிமையினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“சர்வதேச பெண்கள் தினத்திற்கு இணைவாக நிலையான வாழ்தலைநோக்கி ஒன்றிணைவோம்..” என்னும் தொனிபொருளில் சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு சூரிய வள நிலையத்திலிருந்து பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக பறை மேளங்கள் முழங்க பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பெண்களின் வினோத உடைகள் அணிந்தவாறு இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுப்பு
பெண்களின் பிரதிநிதித்துவம் தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் அவசியமானது, எல்லா சந்தர்ப்பத்திலும் ஒப்புதல் இன்றி உடலுறவு குற்றமே, அனைவருக்கும் குறைந்தபட்ச திருமணவயது 18ஆகவேண்டும், வீட்டு வன்முறை வேண்டாம், நீதிகோரும் சகோதரிகளாக நாங்கள் ஒன்றிணைவோம் போன்ற பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு பேரணியானது நடைபெற்றுள்ளது.

பேரணியானது கல்லடி பாலம் ஊடாக கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீமுருகன் விளையாட்டு மைதானத்தினை சென்றடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் விசேடமாக சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.



ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri