பௌத்த துறவியால் பாலியல் துர்நடத்தைக்குள்ளான சிறுமி! நீதிகோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்
கவனயீர்ப்பு போராட்டம்
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது”, “மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும்”, “குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வேண்டும்”, “சிறார்களைக் காப்போம், குற்றங்களை நிறுத்துவோம்”, “சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

மேலும், குறித்த போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்து கொண்டிருந்தார்.

அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam