யாழில் காணி சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு
யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் அரச காணியை தனி நபருக்கு சுபீகரிக்கும் முயற்சி அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது, தனியார் நிறுவனத்திற்கு தாளையடி பகுதியில் அரச காணியினை அளக்க முற்பட்ட வேளை ஒரு சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
பொலிஸாரின் உதவியுடன்
இதன்போது குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் கிராம அலுவலர், சமூக மட்ட அமைப்புகளோடு மீண்டும் கலந்துரையாடி தமது திட்டத்தின் பயன்களை எடுத்துக் கூறி கிராம மக்களின் அனுமதியுடன் குறித்த செயற்றிட்டத்தை செயற்படுத்துவதாக கூறிச் சென்றுள்ளனர்.
எனினும், இன்றுவரை கலந்துரையாடலை மேற்கொள்ளாத நிலையில் குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் நில அளவைத் திணைக்களத்தினருடன் மிகவும் இரகசியமாக அரச காணியை அளப்பதற்காக தாளையடி பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் கிராம மட்ட அமைப்புகளின் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் போது நில அளவைத் திணைக்களத்தினர் தாங்கள் பொலிஸாரின் உதவியுடன் வந்து மீண்டும் இந்த இடத்தை அளவீடு செய்வதாக கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த முயற்சி எமது பிரதேசத்தில் எடுக்கப்பட்ட போது அதனை நாங்கள் முற்றாக தடுத்து நிறுத்தினோம்.
எனினும், நாங்கள் சமூகமட்ட அமைப்புகள் மற்றும் கிராம அலுவலர் உடன் கலந்துரையாடி இந்தத் திட்டத்தால் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தோம்.
திட்டத்திற்கு முற்றாக தடை
இதற்கான கலந்துரையாடலை அவர்கள் ஒழுங்கு செய்வார்கள் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் நேற்று முற்பகல் 10:30 மணி அளவில் நில அளவை திணைக்களத்தினருடன் குறித்த தனியார் நிறுவன அதிகாரிகள் எமது பிரதேசத்தின் நிலப்பரப்பை அளவீடு செய்வதற்காக வருகை தந்தார்கள்.
அங்கு வந்திருந்த நில அளவை திணைக்களத்தினர் அதிகாரிகளுடைய அனுமதியுடன் தான் அங்கு வந்திருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் இது சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போது இதற்கு நாங்கள் ஒரு கலந்துரையாடல் இல்லாமல் அனுமதி வழங்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தோம்.
எமது பிரதேசத்தில் பல குடும்பங்கள் புதிதாக திருமணம் முடித்து காணி அற்று இருக்கிறார்கள்.
அவர்களுக்கு காணி பகிர்ந்து கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் பிரதேச செயலகத்தால் எடுக்கப்படவில்லை. எமது பிரதேசத்தில் இருக்கின்ற அரச காணிகள், வனஜுவராசிகள் திணைக்கள காணிகள் தொடர்பான வரைபடத்தை எங்களுக்கு தருமாறு பிரதேச செயலரிடம் கூறி இருந்தோம்.
ஆனால் அவர் இன்று வரை தரவில்லை. நில அளவை திணைக்களத்தினருக்கும் பிரதேச செயலருக்கும் ஒரு கடிதம் கையளித்திருக்கிறோம்.
எமது நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் கூறியது போன்று எங்களது மக்களுடன் கலந்துரையாடாமல் இதனை அளவீடு செய்ய முயற்சித்ததால் நாங்கள் இந்த திட்டத்திற்கு முற்றாக தடை விதிக்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
