பொதுஜன பெரமுன அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் :கிழித்து வீசப்பட்ட மகிந்த சுவரொட்டிகள் (Photos)
காத்தான்குடி - முகைதீன் பெரிய மெத்தைப் பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள இலங்கை பொதுஜன பெரமுன அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது இன்று(11) இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களால் இவ் அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன காத்தான்குடி செயற்பாட்டாளர் எம்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டிற்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அலுவலகத் தாக்குதலின் போது அங்கு ஒட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் கிழித்து வீசப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri