போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
பதுளை-எல்ல கொடுவல மீரியகெலே பகுதியில் போதைப்பொருள் சோதனைக்கு சென்ற எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (30.08.2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனைக்குச் சென்ற பொலிஸாரை ஒரு குழுவினர் கத்தியால் வெட்டியதில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
கடற்படை சிப்பாய் கைது
தாக்குதலுக்குற்பட்ட இரண்டு பொலிஸாரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற கடற்படை சிப்பாய் ஒருவரை அங்கிருந்த ஏனைய பொலிஸார் கைது செய்துள்ளார்.
அந்த சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு. ஐஸ் போதைப்பொருள், கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri