பாடசாலை மாணவர்கள் மீது போதையில் வந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் (Photo)
மடுவில் சுமார் 12 பேர் கொண்ட குழுவின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியில் நேற்று மேலதிக வகுப்பிற்கு சென்ற 4 மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 12 பேர் கொண்ட இளைஞர்கள் குழு, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் குறித்த மாணவர்களுக்கும், சக மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு பாடசாலையின் அதிபரால் சமரசம் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில், பாடசாலை முடிவடைந்து குறித்த நான்கு மாணவர்களும் மேலதிக வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில் சக மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவர்களை வீடுகளுக்குள் அழைத்து காப்பாற்றியுள்ளனர்.
குறித்த வீட்டினை முற்றுகையிட்டு, மேலும் சிலர் வரவழைக்கப்பட்டு வீட்டுக்குள் நுழைந்தது மீண்டும் மாணவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
பாடசாலையில் நடந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக இப்பிரச்சினை இடம்பெறுவதால் குறித்த மாணவர்கள் மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய அதிபரை தொலைபேசியில் அழைத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிபர் அயல் வீட்டவர்களின் பாதுகாப்பிலிருந்த மாணவர்களை வெளியில் அழைத்து மது போதையில் தாக்க வந்த குழுவோடு சமரசம் செய்ய முயற்சித்த நிலையில் அந்த குழுவினர் மீண்டும் மாணவர்கள் மீது சரமாரியாக தாக்கியதையடுத்து அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் மடு. பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவர்களால் முறைப்பாடு கொடுக்கப்பட்டதையடுத்து, முருங்கன் வைத்தியசாலையில் தற்போது தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (13) பிற்பகல் வரை யாரும் கைது செய்யப்படவில்லையென்பதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
