போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸார் மீது தாக்குதல்
பாணந்துறை பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாணந்துறை வலான பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி மூவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியமையினால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இருவர் கைது
இந்த சம்பவத்தினை தொடர்ந்து பாணந்துறை பிரதேச போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
