யாழில் குடும்பஸ்தர் மீது தாக்குதல் - சினிமா பாணியில் நடந்த கொடூரம்
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சந்தேகநபர் மூன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவின் அம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நேற்று தாக்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அயல் வீட்டைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை சிலர் தாக்கும் காட்சி அங்குள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான 55 வயதான நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
