யாழ்.அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி
யாழ்.அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பெருமளவு வெளிநாட்டு நாயணம் மற்றும் பொருட்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று தமது பூர்வீக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன் கணவன், மனைவி இருவரும் அனலைதீவில் தமது வீட்டில் தங்கியிருந்து புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதல்
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களின் வீட்டினுள் நுழைந்த நால்வர் அடங்கிய முக மூடி கொள்ளை கும்பல் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு 3 ஆயிரம் அமெரிக்க டொலர், கடவுச்சீட்டுக்கள் , உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் படகு மூலம் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam