மட்டக்களப்பில் பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல்! இருவர் கைது
மட்டக்களப்பு - திருப்பெரும்துறை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது குழு ஒன்று வீடு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி சென்ற சம்பவம் தொடர்பாக இருவரை நேற்று புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் கடந்த 24 ம் திகதி திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கர வண்டிகளில் 8 பேர் கொண்ட குழுவினர் உட்புகுந்து கசிப்பு விற்பனை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் என அங்கிருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்தவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
