யானை தாக்குதல்கள் காரணமாக அச்சத்தில் மக்கள்: சவப்பெட்டியை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் (Video)
திருகோணமலை - கோமரங்கடவல பிரதான வீதியை மறைத்து சவப்பெட்டியை வீதியில் வைத்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் கோமரங்கடவல பிரதேசத்தில் மாத்திரம் ஐந்து பேர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை நேற்று முன் தினம் (29.05.2023) கோமரங்கடவல - அடம்பன பகுதியைச் சேர்ந்த உக்குராலகே ஜயரத்ன (64 வயது) யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய சடலத்தை வீதியில் வைத்தே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யானை தாக்குதலை கட்டுப்படுத்துமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 200இற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பௌத்த பிக்குமார் என பலரும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மதவாச்சி
மதவாச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடாஹல்மில்லேவ கிராமத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30.05.2023) அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வயல் நிலத்தை பாதுகாக்க வயலில் தங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காட்டு யானையின் பிடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குடாஹல்மில்லேவ கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய டி.ஜயவர்தன என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
ஹல்மிலேவ என்ற இந்த சிறிய கிராமம் தொடர்ந்து காட்டு யானைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
