கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் எச்சரிக்கை - வெளியான முக்கிய தகவல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் மின்னஞ்சல் ஒன்று வெளியானது.
விமான நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த போலியான மின்னஞசல் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜரின் மின்னஞ்சலுக்குள் அனுமதியின்றி நுழைந்து அந்த போலி மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் குண்டு வெடிக்கவுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போலியான மின்னஞ்சல் எச்சரிக்கையை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தல விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
you may like this video...
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri