கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் எச்சரிக்கை - வெளியான முக்கிய தகவல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் மின்னஞ்சல் ஒன்று வெளியானது.
விமான நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த போலியான மின்னஞசல் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜரின் மின்னஞ்சலுக்குள் அனுமதியின்றி நுழைந்து அந்த போலி மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் குண்டு வெடிக்கவுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போலியான மின்னஞ்சல் எச்சரிக்கையை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தல விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
you may like this video...
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri