‘செக்கிங்’ என்ற பெயரில் தமிழ் பெண்களுக்கு நடந்த கொடுமைகள்!!
இந்திய அமைதிப்படை காலத்தில் ஈழத்தில் பாலியல் வல்லுறவுகள் மும்முரமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில், இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியிருந்த ஒரு கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது.
“நாங்கள் வேண்டுமென்றே பெண்களை இவ்வாறு சோதனையிடுவதில்லை. இதோ பாருங்கள்… எங்கள் அதிகாரி ஒருவர் வாகனத்தில் செல்லும் போது வீதியில் இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருக்கின்றார்கள்.
ஒரு பெண் கையசைக்க மற்றப் பெண் ஸ்கேர்ட்டை உயர்த்தி தானியங்கித் துப்பாக்கியை எடுத்து எங்கள் அதிகாரி மற்றும் ஜவான்கள் மீது சுட ஆரம்பிக்கின்றாள்.
பெண்களையும் நாங்கள் சோதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? தொடைகளுக்கு இடையேயும், ஜாக்கட்டுக்குள்ளும் ஆயுதங்களை மறைந்துவைத்திருப்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றார்கள்" என்று அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதுபோன்று, இந்திய இராணுவ உயரதிகாரிகள் ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள் பற்றிக் கூறிய சம்பவங்களை மீள் பதிவு செய்கின்றது இந்த ‘அவலங்களின் அத்தியாயங்கள்’ ஒளியாவணம்: