அமெரிக்காவில் ரயில் நிலையத்தில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஐவர் பலி - 16 பேர் படுகாயம்
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 08:30 மணிக்கு (12:30 GMT) சன்செட் பூங்காவில் உள்ள 36வது தெரு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ரயில் நிலையத்தை விட்டு தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளின்படி, சந்தேகநபர் ஆரஞ்சு நிற உடை மற்றும் முகமூடியை அணிந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கூட்டத்தை திசை திருப்ப ஒரு புகை குண்டை வீசினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மக்கள் அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் அது குறித்து பொலிஸார் உறுதிபடுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan