அஸ்வெசும நிவாரணத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இணக்கம்
அஸ்வெசும வேலைத்திட்டத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான அதிகாரிகளை நியமிப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளை நியமிக்க இணக்கம்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, அஸ்வெசும வேலைத்திட்டத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான அதிகாரிகளை நியமிப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்து அதனை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான இயலுமை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
