பூமிக்குத் திரும்பியது ஆர்டெமிஸ் II குழு
'ஆர்டெமிஸ் II' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திர பயணத்தின் ஒரு பகுதியான ஓரியன் விண்கலம், தனது சந்திர பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரைக்கு அப்பால், பசிபிக் பெருங்கடலில் இன்று (11) உள்ளூர் நேரப்படி காலை 5.30 மணிக்கு ஓரியன் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
பூமிக்கு அப்பால் பயணித்த
ஓரியன் விண்கலம் ஏப்ரல் 6 அன்று ஏவப்பட்டு, தனது 10 நாள் சந்திர பயணத்தைத் தொடங்கியது.
அதன்படி, இந்த பயணத்தின் கீழ் அவர்களால் 406,771 கி.மீ (252,756 மைல்கள்) சந்திர பயணத்தை முடிக்க முடிந்தது.
Welcome home Reid, Victor, Christina, and Jeremy! 🫶
— NASA (@NASA) April 11, 2026
The Artemis II astronauts have splashed down at 8:07pm ET (0007 UTC April 11), bringing their historic 10-day mission around the Moon to an end. pic.twitter.com/1yjAgHEOYl
இந்த தூரம், மனிதர்கள் இதுவரை பூமிக்கு அப்பால் பயணித்த மிகப்பெரிய தூரமாகும்.